பொதுவாக பரிஹாரம் என்பது கிரஹங்களின் தோஷத்தை குறைக்க செய்யப்படுகிறது.சில ஜாதகங்களில் பாவகிரஹங்களான செவ்வாய், சனி, ராஹு,கேது போன்ற கிரஹங்கள் அமரும் இடத்தைப் பொறுத்து தோஷங்கள் ஏற்படும்.
பொதுவாக செவ்வாய் 1,2,4,7,8 மற்றும் 12 ஆகிய ஸ்தானங்களில் நின்றால் செவ்வாய் தோஷமாகும். செவ்வாய் நின்ற ராசியைப் பொருத்து தோஷத்தின் அளவு இருக்கும். பொதுவாக செவ்வாயை குரு பார்த்தால் தோஷம் குறையும்.
மேலும் செவ்வாய்க்கு பரிஹாரமாக முருகரைவழிபாடு செய்யலாம்.செவ்வாய் கிரஹ மூலமந்திர ஹோம்மும் செய்யலாம்.
அவ்வாறேராஹு/கேது நிற்கும் ஸ்தானத்தை பொறுத்து தோஷம் ஏற்படும்.இதற்கு முதன்மையான பரிஹாரம் “ஸர்ப்பபிரதிஷ்டை” செய்வதாகும்.இதில் ராஹு/கேது மூல மந்திரத்தால் ஹோமம் செய்து பின்னர் ஸர்ப்ப உருவங்களை (கற்சிற்பங்கள்) முறையாக பிரதிஷ்டை செய்து 48 நாட்கள் வழிபட வேண்டும்.
இவ்வாறு திருமண தடை நீங்கி திருமணம் நடைபெற ஸ்வயமவராபார்வதி ஹோமம் செய்யலாம்.
நம் மையத்தில் அனைத்து விதமான தோஷங்கள் மற்றும் தடைகள் நீங்க சரியான பரிஹார ஹோமங்கள் நல்ல முறையில் நடத்தி தரப்படும்.